தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும்.....
பாரதி கண்டிராத புதுமை பெண் என சுய விளம்பரம் கொடுத்து விட்டு 'சுண்டகாய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?'(எங்க அம்மாவுக்கு தான் தெரியும்) என்று பதிவு இடுவது எனக்கும் நல்லதல்ல , சுண்டகாய்க்கும் நல்லதல்ல,சமூகத்துக்கும் நல்லதல்ல...
எனவே .....
தாலி என்பது பெண்ணுக்கு வேலி,நாட்டுக் கோழி என்று சமூகத்தில் ஒரு காலத்தில் சொல்ல பட்டு வந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால் பெண்ணிற்கு அமெரிக்காவில் லச்சதிற்கு மேல் சம்பளம் கிடைக்கும் எனில் வேலி தாண்டி என்ன கடல் தாண்டி அனுப்ப கூட தயாராக இருக்கிறது நம் குடும்பம் என்ற சிறு சமூகம்[அம்மா,அப்பா,தம்பி,பாட்டி மன்னிக்கவும் ].
இந்த ஒரு விஷயம் ஒன்றே போதும் என நினைக்கிறன் சமூகத்தின் மனநிலை என்ன என்று படம் பிடித்து காட்ட .
ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் போட்டு கொண்டு ஒரு பெண் நடந்தால் அவ்வளவுதான் . ...ஏகப்பட்ட பின்நூட்டம் (அதுதாங்க கமண்ட்ஸ்) வரும் .இப்போது அது படி படியாக குறைந்து வருகிறது.
[ஒரு படி மேலே போயே சொல்கிறேன்..உடையை பொறுத்த வரையில் ஜீன்ஸ் எனக்கு பிடித்த ஓன்று கிடையாது.ஜீன்ஸ் நம் உடம்பை ரொம்பவும் பிடித்து கொண்டு விடுவதால் ...அதை எனக்கு பிடிப்பதில்லை.]
தாலி கட்டும் கலாச்சாரம் மறைந்தால்,ஜீன்ஸ் போட்டு கொண்டு நடந்தால் பெண் சுகந்திரம் கிடைத்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன்.[ஏன் என்றால் நான் தான் பாரதி கண்டிராத புதுமை பெண் ஆயிற்றே ] .
ஆனால் இது ஓவ்வொன்றும் பெண் மன அடிமை தனத்தில் இருந்து,தயக்கத்தில் இருந்து விடுபடும் ஒரு வழி முறையாகவே கருதுகிறேன்.
தாலி -க்கு பதில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன்[பெரியார் சொல்லி விட்டார் என்று நெனைக்கிறேன்.எனக்கு பொது அறிவு கொஞ்சம் அதிகமாகவே குறைவு ] மாற்றிக் கொள்ளலாமே ?
[இதில் இன்னொரு சவுகரியம் என்னவெண்றால் ,அவசரத்துக்கு அடகு வைக்க இரண்டு செய்ன் உள்ளதே ....தாலி என்றால் ஓன்று தானே இருக்கும்]
கலாச்சாரம் என்பதெல்லாம் ஒருவித அடிமை படுத்தும் அமைப்பே என்று கருதுகிறேன்.
அந்தந்த கால கட்டதிற்கு எது சவுகரியமோ அதை செய்வது தான் சிறந்தது ...அது தான் உண்மையான் சுகந்திரம் என நான் கருதுகிறேன்.
எப்படியும் இந்த தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் இன்னும் ஐம்பது வருடத்தில் இருந்து படி படியாக மறைய தொடங்கி ...இன்னும் 200 வருடத்தில் முழுவதும் மறைந்து விடும் என நான் நம்புகிறேன்.நீங்கள் நம்பறீங்களா ?
-யுக கோபிகா