Thursday, June 17, 2010

நன்றி சொல்ல உனக்கு...





தோழி : ஏண்டி கோபி ,உன்னையும்  உலகம் நம்புதா ?
யுக கோபிகா :அது அவுங்க தலைவிதி .....

Friday, June 11, 2010

தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும்.....



பாரதி கண்டிராத புதுமை பெண் என சுய விளம்பரம் கொடுத்து விட்டு 'சுண்டகாய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?'(எங்க அம்மாவுக்கு தான் தெரியும்) என்று பதிவு இடுவது எனக்கும் நல்லதல்ல , சுண்டகாய்க்கும் நல்லதல்ல,சமூகத்துக்கும் நல்லதல்ல...


எனவே .....

தாலி என்பது பெண்ணுக்கு வேலி,நாட்டுக் கோழி என்று சமூகத்தில் ஒரு காலத்தில் சொல்ல பட்டு வந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால் பெண்ணிற்கு அமெரிக்காவில் லச்சதிற்கு மேல் சம்பளம் கிடைக்கும் எனில் வேலி தாண்டி என்ன கடல் தாண்டி அனுப்ப கூட தயாராக இருக்கிறது நம் குடும்பம் என்ற சிறு சமூகம்[அம்மா,அப்பா,தம்பி,பாட்டி மன்னிக்கவும் ].
இந்த ஒரு விஷயம் ஒன்றே போதும் என நினைக்கிறன் சமூகத்தின் மனநிலை என்ன என்று படம் பிடித்து காட்ட .

ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் போட்டு கொண்டு ஒரு பெண் நடந்தால் அவ்வளவுதான் . ...ஏகப்பட்ட பின்நூட்டம் (அதுதாங்க கமண்ட்ஸ்) வரும் .இப்போது அது படி படியாக குறைந்து வருகிறது.
[ஒரு படி மேலே போயே சொல்கிறேன்..உடையை பொறுத்த வரையில் ஜீன்ஸ் எனக்கு பிடித்த ஓன்று கிடையாது.ஜீன்ஸ் நம் உடம்பை ரொம்பவும் பிடித்து கொண்டு விடுவதால் ...அதை எனக்கு பிடிப்பதில்லை.]

தாலி கட்டும் கலாச்சாரம் மறைந்தால்,ஜீன்ஸ் போட்டு கொண்டு நடந்தால் பெண் சுகந்திரம் கிடைத்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன்.[ஏன் என்றால் நான் தான் பாரதி கண்டிராத புதுமை பெண் ஆயிற்றே ] .
ஆனால் இது ஓவ்வொன்றும் பெண் மன அடிமை தனத்தில் இருந்து,தயக்கத்தில் இருந்து விடுபடும் ஒரு வழி முறையாகவே கருதுகிறேன்.

தாலி -க்கு பதில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன்[பெரியார் சொல்லி விட்டார் என்று நெனைக்கிறேன்.எனக்கு பொது அறிவு கொஞ்சம் அதிகமாகவே குறைவு ] மாற்றிக் கொள்ளலாமே ?
[இதில் இன்னொரு சவுகரியம் என்னவெண்றால் ,அவசரத்துக்கு அடகு வைக்க இரண்டு செய்ன் உள்ளதே ....தாலி என்றால் ஓன்று தானே இருக்கும்]

கலாச்சாரம் என்பதெல்லாம் ஒருவித அடிமை படுத்தும் அமைப்பே என்று கருதுகிறேன்.
அந்தந்த கால கட்டதிற்கு எது சவுகரியமோ அதை செய்வது தான் சிறந்தது ...அது தான் உண்மையான் சுகந்திரம் என நான் கருதுகிறேன்.

எப்படியும் இந்த தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் இன்னும் ஐம்பது வருடத்தில் இருந்து படி படியாக மறைய தொடங்கி ...இன்னும் 200 வருடத்தில் முழுவதும் மறைந்து விடும் என நான் நம்புகிறேன்.நீங்கள் நம்பறீங்களா ?

-யுக கோபிகா

Thursday, June 10, 2010

பாரதி,பெரியார் கண்டிராத புதுமை பெண்..

நான் சுகந்திரம் பெற்று விட்டேன்..

இன்று எல்லா வாய்ப்புகளும்
என் கைகளில் ..

வீட்டு கதவிடுக்கில் எட்டி பார்த்து
கொண்டிருந்த காலம் போய்
வலை உலகில் எட்டி பார்க்கிறேன்..

எப்போதும் சேலை கட்டும் காலம் போய்
திருமண வைபோகங்களில் மட்டும்
சேலை கட்டி பழகுகிறேன்..

வானத்தை பார்த்து சோறு ஊட்ட
மட்டும் கற்று வைத்திருந்த காலம் போய்.
வான் வெளிக்கும் போய் வந்து விட்டேன்..

இன்னும் மெல்லிய சந்தேகம் வருகிறது..

நான் ஜீன்ஸ்,டீ-ஷர்ட் -டில் நடந்து போகும் போது
உற்று உற்று பார்க்கும் சில விழிகளைப் பார்க்கும் போதும்..

மாதம் முதல் தேதி ஆனால் என் சம்பளத்தில்
கணக்கு கேக்கும் அம்மாவை நினைக்கும் போதும்..

சில சமயங்களில் "லேடீஸ் பஸ்ட்"
என்ற வாசகம் காதில் விழும் போதும்..

இன்று எனக்கு கிடைத்திருக்கும் சுகந்திரம்
பாசாங்கா?காலத்தின் கட்டயமா ?

-யுக கோபிகா
என் தோட்டத்தில் பூக்கும் முதல் பூ ..

தலைப்பு கவிதை மாதிரி இருக்குதேனு பார்க்குரீங்களா ....சும்மா முதல் post ... அது தான் ..
என்னை பத்தி கொஞ்சம் சொல்லணும் ...அதிகமா சொல்ல பயமா இருக்கு ...
என்னதான் பாரதி ,பெரியார் கண்டிராத,காண விரும்பிடும் புதுமை பெண் என்று சொன்னாலும் இந்த சமுகத்த நினைச்சா கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது..
ஒரு மாசமா பதிவுலகத்த வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன் ..
சும்மா ,நாமளும் கதை(!),கவிதை(?) எழுதலாமேன்னு கெளம்பி வந்துருக்கேன் .
என்ன தைகிரியம்னு கேக்கரீங்களா .அட ஒன்னு ,ரெண்டு கவிதை குமுதம் சிநேகிதி -யில் கூட வந்தீருக்குங்க .

-யுக கோபிகா